உலகம்
‘டுவிட்டர் போனா என்ன.. நானே சொந்தமா ஒன்ன உருவாக்குறேன்’ டிரம்ப்
முன்னாள் அதிபர் டிரம்பின் டுவிட்டர் கணக்கு நீக்கப்பட்டுள்ள நிலையில், டுவிட்டருக்குப் பதிலாக புதியதொரு தளத்தை உருவாக்கப் போவதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற அதனை பொறுத்துக்கொள்ள முடியாத டிரம்ப் உணர்ச்சி வசப்பட்டு பேசினார். அவருடைய இந்த பேச்சால், அவரது ஆதரவாளர்கள் நாடாளுமன்றத்துக்குள் அத்துமீறி நுழைய முயன்று கலவரத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து டிரம்ப் தனது வீடியோவை டுவிட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் பதவிட்டார். அவரது வீடியோ வன்முறையைத் தூண்டும் வகையில் இருந்ததால், அந்த வீடியோக்களை டுவிட்டர், ஃபேஸ்புக் நிறுவனங்கள் நீக்கின. டுவிட்டர் நிறுவனம் டிரம்பின் கணக்கை தற்காலிகமாக நீக்கியது. பின்னர் தொடர்ந்து வன்முறையைத் தூண்டும் வகையில் டுவீட் செய்ததால், டிரம்பின் டுவிட்டர் கணக்கு நிரந்தரமாக முடக்கப்பட்டது.
இந்த நிலையில், டுவிட்டருக்கு மாற்றாக புதியதொரு தளத்தை உருவாக்கப்போவதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அதிபருக்கான டுவிட்டர் கணக்கில் இருந்து அவர் பதிவிட்ட கருத்தில், ‘டுவிட்டர் ஊழியர்கள் ஜனநாயக கட்சிக்கு ஆதரவாக செயல்படுகின்றனர். கருத்துச் சுதந்திரத்தைப் பறிக்கிறது. எனவே, கருத்துச்சுதந்திரம் இருக்கும் வகையிலான ஒரு தளத்தை உருவாக்க முயற்சி செய்கிறேன்’ இவ்வாறு தெரிவித்துள்ளார்.