உலகம்
ஃபேஸ்புக், டுவிட்டர் முடக்கம் எதிரொலி: இணையதளம் தொடங்குகிறார் டிரம்ப்!
முன்னாள் அமெரிக்க அதிபரின் டுவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் முடக்கப்பட்டத்தை அடுத்து தற்போது அவர் புதிய இணையதளத்தை தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளார்.
அமெரிக்காவில் கடந்த ஜனவரி மாதம் டிரம்ப் ஆதரவாளர்கள் நூற்றுக்கணக்கானோர் நாடாளுமன்றத்தில் புகுந்து கலவரத்தை ஈடுபடுத்தினர். இந்த சம்பவம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் சில கருத்துக்களை தனது சமூக வலைதளங்களில் டிரம்ப் பதிவு செய்தார். இதனை அடுத்து வன்முறையை தூண்டியதாக அவருடைய டுவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூ டியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் நிரந்தரமாக முடக்கப்பட்டன.