இந்தியா
வாக்கு கேட்க சென்ற இடத்தில் வாக்காளர்களுக்கு ஷேவ் செய்து குளிப்பாட்டி விடும் வேட்பாளர்கள்!
தெலுங்கானாவில் நடைபெற உள்ள சட்ட மன்ற தேர்தலினை ஓட்டி வாக்கு கேட்க சென்ற இடத்தில் வக்காளர்களுக்கு ஷேவ் செய்வது, குளிப்பாட்டி விடுவது போன்று இதுவரை யாரும் கேள்விப்பெறாத விதத்தில் டிஆர்எஸ் வேட்பாளர்கள் செய்துள்ளது அனைவரையும் வியக்க வைத்துள்ளது.
டிஆர்எஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் சட்டமன்ற பேச்சாளருமான எஸ் மதுசூதனா சாரி வாக்கு கேட்க சென்ற இடத்தில் வாக்காளர்களுக்கு முடி வெட்டி விட்டுள்ளார்.
கோரம் கனகையா என டிஆர்எஸ் வேட்பாளர் வாக்காளர்களைக் குளிப்பாட்டி விட்டுள்ளார். டி ராஜையா காய்கறி விற்றுள்ளார். இது வரை இந்தியாவில் இப்படி ஒரு நிகழ்வு நடந்தது இல்லை என்று அனைவரை ஆச்சரியப்பட வைத்துள்ளது.