சினிமா செய்திகள்

த்ரிஷாவுக்குத் தடை விதிக்க நடவடிக்கை..!- வெளிவந்த பகீர் பின்னணி

Published

on

என்றும் இளமை துள்ளலுடன் தென்னிந்திய திரையுலகில் வலம் வரும் நடிகையாக இருப்பவர் த்ரிஷா. பல ஆண்டுகளாக கதாநாயகியாக த்ரிஷா நடித்து வந்தாலும், அவருக்கு வயதான தோற்றமே வரவில்லை. இதன் காரணமாக இன்றும் இளம் ஹீரோக்களோடு ஜோடி போட்டு நடித்து வருகிறார் த்ரிஷா. சமீபத்தில் கூட விஜய் சேதுபதியுடன் ’96’ படத்தில் நடித்து ரசிகர்களின் மனதைக் கவர்ந்தார்.

இந்நிலையில் அவர் நடிப்பில் உருவாகியுள்ள ‘பரமபதம் விளையாட்டு’ படத்தால் த்ரிஷாவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்தப் படத்தை சென்ற ஆண்டே வெளியிட படக்குழு முடிவு செய்து பணிகளைச் செய்து வந்துள்ளது.

ஆனால், இந்தப் படம் குறித்தான ப்ரொமோ நிகழ்ச்சியில் த்ரிஷா கலந்து கொள்ளவில்லை. இதனால் அவருக்கும் படத்தைத் தயாரித்த 24 ஹவர்ஸ் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்துக்கும் பிரச்சனை ஏற்பட்டதாக சொல்லப்பட்டது.

இப்படியான சூழலில் பரமபதம் விளையாட்டு படத்தை நேரடியாக ஓடிடி-யில் ரிலீஸ் செய்ய தயாரிப்பு நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்காக ஒரு சிறப்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து படத்தைப் ப்ரொமோட் செய்ய தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்கும் த்ரிஷா, ஒத்துழைப்பு நல்காத காரணத்தால், அவரின் படங்களுக்குத் தயாரிப்பாளர்கள் தரப்பிலிருந்து தடை விதிக்க முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாம்.

 

 

seithichurul

Trending

Exit mobile version