தமிழ்நாடு

பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பு புகைப்படத்தை பகிர்ந்த த்ரிஷா!

Published

on

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள பிரபலமான கோவில் ஒன்றின் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில்ல் நடிகை த்ரிஷா பதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கிவரும் ’பொன்னியின் செல்வன்’ என்ற திரைப்படத்தில் நடிகை த்ரிஷா முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு மத்திய பிரதேசத்தில் நடந்து வரும் நிலையில் இந்த படப்பிடிப்பு நடைபெறும் இடத்தில் எடுத்த புகைப்படத்தை நடிகை த்ரிஷா தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ஆர்ச்சா என்ற இடத்தில் உள்ள கோவில் ஒன்றில் புகைப்படத்தை நடிகர் த்ரிஷா பகிர்ந்துள்ளார். மேலும் இந்த கோவிலில் படப்பிடிப்பு நடக்கும் கேமராவின் புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதிலிருந்து அவர் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ஆர்ச்சா கோவிலில் நடைபெற்று வரும் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார் என்பது உறுதியாகிறது.

ஏற்கனவே மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள குவாலியர் விமான நிலையத்தில் கார்த்தி மற்றும் பிரகாஷ்ராஜ் இருந்த புகைப்படமும் வைரல் ஆனது என்பதும் இதனை அடுத்து ’பொன்னியின் செல்வன்’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு மத்திய பிரதேச மாநிலத்தில் நடைபெறுகிறது என்பது உறுதியாகியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த சில நாட்களாக பாண்டிச்சேரியில் ’பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பு நடந்த நிலையில் தற்போது அடுத்த கட்டமாக மத்திய பிரதேச மாநிலத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகவும் இத்துடன் இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவடைவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மணிரத்தினம் இயக்கத்தில் ஏஆர் ரகுமான் இசையில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தின் முதல் பாகம் அடுத்த ஆண்டு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version