சினிமா செய்திகள்
மீண்டும் த்ரிஷா… 7 ஆண்டுகளுக்குப் பின்னர் கன்னட சினிமாவில் ரீஎன்ட்ரி!
நடிகை த்ரிஷா சுமார் 7 ஆண்டுகளுக்குப் பின்னர் கன்னட மொழி சினிமாவில் மீண்டும் நடிக்க உள்ளார்.
2014-ம் ஆண்டு கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் உடன் ‘பவர்’ என்னும் படத்தில் நாயகி ஆக நடித்து இருந்தார் த்ரிஷா. அதன் பின்னர் கன்னட படங்களில் த்ரிஷா நடிக்கவே இல்லை. தொடர்ச்சியாக தமிழில் மாறுபட்ட கதைகளில் நடிக்கும் முயற்சியை மேற்கொண்டு இருந்தார். தற்போது 7 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் நடிகர் புனித் ராஜ்குமாரின் படத்துக்கே ஒப்பந்தம் ஆகி ரீ-என்ட்ரி கொடுக்கிறார் த்ரிஷா.
புனித்- த்ரிஷா மீண்டும் இணைந்து நடிக்கும் இந்தப் படத்துக்கு ‘த்விட்வா’ எனப் பெயர் வைத்துள்ளனர். இந்தப் படத்தை இயக்குநர் பவண் குமார் இயக்குகிறார். இவர் இதற்கு முன்னர் கன்னடத்தில் லூசியா, யூ-டர்ன், குடியெடமைதே ஆகிய ஹிட் படைப்புகளைக் கொடுத்தவர். த்ரிஷா தற்போது தமிழில் இயக்குநர் மணிரத்னம் இயக்கி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார்.
வரலாற்றுப் படத்துக்காக பொன்னியின் செல்வன் நாவலை ஆங்கிலத்தில் வாசித்தல், நடிப்புப் பயிற்சி, குதிரை ஏற்றம் பயிற்சி எனப் பிஸியாக இருக்கிறார். விரைவில் புனித் உடனான கன்னட படத்திலும் இணைய உள்ளார்.