சினிமா செய்திகள்

நெகட்டிவ் என்ற வார்த்தையை கேட்டு முதல்முறையாக மகிழ்ச்சியடைகிறேன்: த்ரிஷா டுவிட்

Published

on

பிரபல நடிகை த்ரிஷா கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அவர் கொரோனா நோயிலிருந்து குணம் ஆகி விட்டதாக டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக கமல்ஹாசன், வடிவேலு, த்ரிஷா, சத்யராஜ், ஷெரின், ஷோபனா, ரைசா வில்சன் உள்பட ஒருசில திரை உலக பிரமுகர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர் என்பதும் அவர்களில் சிலர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வந்த நடிகை த்ரிஷா தற்போது குணமடைந்து விட்டதாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதுவரை நான் நெகட்டிவ் என்ற வார்த்தையை கேட்டு சந்தோஷப்பட்டது இல்லை என்றும் ஆனால் முதல்முறையாக கொரோனா நெகட்டிவ் ரிசல்ட் வந்தபிறகு மிகுந்த சந்தோஷமடைந்தேன் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் தான் குணமாக வேண்டும் என பிரார்த்தனை செய்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் தனது நன்றி என்றும் 2022ஆம் ஆண்டு எதிர்கொள்ள தயாராகி விட்டேன் என்றும் அவர்கள் வைத்துள்ளார்.

நடிகை த்ரிஷாவின் இந்த டுவிட்டை அடுத்து அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகை த்ரிஷா தற்போது பொன்னியின் செல்வன், ராம், கர்ஜனை, சதுரங்க வேட்டை 2, ராங்கி ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார் என்பதும் இந்த படங்கள் அடுத்தடுத்து ரிலீசாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Trending

Exit mobile version