சினிமா செய்திகள்
த்ரிஷாவுக்கு ட்விட்டரில் 50 லட்சம் ரசிகர்கள்!
பதினாறு ஆண்டுகள் ஆகியும் என்றும் பதினாறாக தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டு இருக்கிறார் நடிகை த்ரிஷா. கடந்த ஆண்டு இறுதியில் அவர் நடிப்பில் வெளியான 96 படம் ஜெஸ்சியை மறக்க செய்து ஜானுவை காதலிக்க செய்து விட்டது.
சமூக வலைதளங்களில் பிரபலங்கள் பலரும் குடியேறி வரும் நிலையில், த்ரிஷாவுக்கோ ட்விட்டரில் 50 லட்சம் ரசிகர்கள் பின் தொடர்கின்றனர்.
5 மில்லியன் ஃபாலோயர்களை பெற்ற மகிழ்ச்சியை அண்மையில் த்ரிஷா, தனது கார்ட்டூன் வடிவ இமேஜை பதிவிட்டு, சந்தோஷத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
த்ரிஷா நடிப்பில் உருவாகி உள்ள சதுரங்க வேட்டை 2 படம் எப்போது வெளியாகும் என்ற தகவல் இதுவரை இல்லை. 96 படம் போன்று தனக்கு மீண்டும் ஒரு வலுவான வெற்றி கதை வேண்டும் என த்ரிஷா ஆர்வமாக கதை கேட்டு வருவதாகவும், செய்திகள் வெளியாகி உள்ளன.
ஜானுவை மறக்க இன்னொரு அவதாரம் த்ரிஷா விரைவில் எடுப்பாரா என்பதே அவரது ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பு.
5. அபிநந்தனை காக்குமா இந்தியா? பார்த்திபனின் கேள்வி கவிதை!
பாகிஸ்தானில் அத்துமீறி நுழைந்ததாக இந்திய போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான் ராணுவம், தமிழக வீரரான விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமானை கைது செய்துள்ளது.
இதற்கு இந்திய தரப்பில் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு, விரைவில் அவரை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சருக்கும் இந்திய அரசு கோரிக்கை வைத்துள்ளது.
இந்நிலையில், நடிகர் பார்த்திபன், தனது ட்விட்டர் பக்கத்தில்,
”கணவனின் கடமையும்
தந்தையின் வீரமும்,
மனைவியின் மனதையும்
மகனின் கண்களையும்,
ஈரப்படுத்தாமல் சேதப்படுத்தாமல்
எத்தனை நிமிடங்கள்
காக்கும்?
அதற்குள் காக்குமா
இந்தியா அந்த வீரத்
திருமகனை?”
என கவிதையின் மூலம் இந்திய அரசுக்கு கேள்வியை எழுப்பியுள்ளார்.