தமிழ்நாடு

3 மடங்கு வரை மின் கட்டணம் உயர்வு: அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கம்

Published

on

தமிழகத்தில் ஒரு சிலருக்கு மூன்று மடங்கு மின் கட்டணம் வந்திருப்பதாக வந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பலர் வேலையின்றி வருமானம் இன்றி இருக்கும் நிலையில் திடீரென மூன்று மடங்கு மின் கட்டணம் உயர்ந்துள்ளதாக மின் பயனீட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் வீடுகளுக்கான மின்கட்டண கணக்கெடுப்பு பணிகள் மேற்கொள்ள முடியாத காரணத்தினால் முந்தைய மாத கட்டணம் அல்லது பயன்படுத்திய அளவை மின்வாரியத்திற்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்பினால் கணக்கீடு செய்து பணம் கட்டலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பெரும்பான்மையான வீடுகளில் கூடுதல் மின் கட்டணம் கணக்கிடும் செய்யப்பட்டு வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக ஏப்ரல் மாதம் ரூபாய் 560 கட்டிய மின் பயனீட்டாளர் ஒருவருக்கு ஜூன் மாதம் ரூபாய் 2506 என மின் கட்டணம் வந்துள்ளது. அதேபோல் வீட்டு வேலை செய்யும் ஒருவர் ரூபாய் 170 மட்டுமே மின் கட்டணம் செலுத்தி வந்த நிலையில் தற்போது ரூபாய் 830 வந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

இதுகுறித்து உடனடியாக மின்சார வாரியம் கவனம் செலுத்தி கட்டணங்களை குறைக்க வேண்டும் என்றும் கூடுதலாக வசூலிக்கப்பட்ட கட்டணத்தை திரும்ப வழங்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். மேலும் மின்சார வைப்பு தொகை வசூலிப்பதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடப்பட்டது.

இந்த நிலையில் இதுகுறித்து தகவல் அறிந்ததும் மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் கூறுகையில் ’மின் பயனாளரின் மின் இணைப்பு எண், முகவரி, மண்டலம் பற்றி தெளிவாக குறிப்பிட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிக கட்டணம் பெற்றிருந்தால் திருப்பி வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version