தமிழ்நாடு

எஞ்சினில் கோளாறு.. ஆனாலும் புறப்பட்ட விமானம்.. திருச்சியில் பரபரப்பு

Published

on

திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் இருந்து துபாய் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் பிரச்சனை காரணமாக மீண்டும் திருச்சி விமான நிலையத்திலேயே தரையிறக்கப்பட்டது.

இன்று அதிகாலை 1.30 மணிக்கு இந்த சம்பவம் நடந்துள்ளது. எஞ்சினில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக இந்த பிரச்சனை உருவாகி உள்ளது. ஒரு என்ஜின் மட்டும் வேலை செய்யாமல் போய் இருக்கிறது.

ஆனால் இதை விமானி விமானம் எடுக்கப்படும் வரை கண்டுபிடிக்கவில்லை. கடைசி நேரத்தில் விமானம் புறப்பட்ட பின்தான் கண்டுபிடித்துள்ளார்.

விமானத்தில் இருந்த பிரச்சனை தெரிந்தவுடன் வேகவேகமாக விமானி செயல்பட்டார். அவசர அவசரமாக விமானத்தை தரையிறக்கினார்.

இந்த கோளாறு காரணமாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. வேறு விமானம் மூலம் பயணிகள் துபாய்க்கு அனுப்பப்பட்டனர்.

 

 

 

 

seithichurul

Trending

Exit mobile version