செய்திகள்
அதிர்ச்சி.. நக்கீரன் கோபால் மீது தேச துரோக வழக்கு!
![1 (1) - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2018/10/1-1-1.jpg)
சென்னை: நக்கீரன் கோபால் மீது தேச துரோக வழக்கு பதியப்பட்டு இருக்கிறது.
பேராசிரியை நிர்மலா தேவி குறித்த கட்டுரை காரணமாக, ஆளுநர் மாளிகை கொடுத்த புகாரின் அடிப்படையில் நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டுள்ளார். நக்கீரன் கோபால் சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் வைத்து விசாரிக்கப்பட்டு வருகிறார்.
ஜாம்பஜார் காவல்நிலையத்தில் இவர் மீது வழக்கு பதியப்பட்டு இருக்கிறது. கோபால் மீது தேச துரோக வழக்கு பதியப்பட்டு இருக்கிறது.
ஆளுநருக்கு எதிராக எழுதிய காரணத்தால் இந்த பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இன்று மாலைக்குள் இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு காவலில் எடுக்கப்பட வாய்ப்புள்ளது.