தமிழ்நாடு

ஆசிரியர் தேர்வு வாரியம்: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

Published

on

டி.ஆர்.பி தேர்வு என்று கூறப்படும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2020-21 ஆம் ஆண்டுக்கான பணித் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக சற்றுமுன் தகவல்கள் வெளிவந்துள்ளன.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குனர் நிலை ஒன்று, கணினி பயிற்றுனர் நிலை ஒன்று பணியிடங்களில் சேர ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து ஆயிரக்கணக்கானோர் இந்த பணிகளுக்கு விண்ணப்பம் செய்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தமிழக அரசின் அரசாணையின்படி தமிழ் வழியில் பயின்ற மாணவர்களுக்கு சான்றிதழ் சார்ந்த மென்பொருளில் பரிமாற்றம் மாற்றம் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் விண்ணப்பதாரர்கள் ஒரு சிலர் விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததை அடுத்து மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை ஆன்லைனில் சமர்ப்பிக்க தற்போது கால அவகாசம் நீட்டித்து அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் அக்டோபர் 31 மாலை 5 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து விண்ணப்பதாரர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version