தமிழ்நாடு
TNSTC பேருந்துகளில் தாம்பரம் வழியாகச் சென்னை வருபவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி!
TNSTC பேருந்துகளில் தாம்பரம் வழியாகச் சென்னை வருபவர்களுக்கு இது கண்டிப்பாக மகிழ்ச்சி செய்தியாக இருக்கும்.
ஒரு காலத்தில் தென், மத்திய தமிழ்நாடு பகுதிகளிலிருந்து சென்னைக்கு TNSTC பேருந்துகளில் வரும் போது அது தாம்பரம், குரோம்பெட், பல்லாவரம் வழித்தடத்தில் கோயம்பேடு பேருந்து நிலையத்தைச் சென்று அடையும்.
ஆனால் சென்னையில் அதிகரித்து வந்த போக்குவரத்து நெரிசல் காரணமாக TNSTC பேருந்துகள் தாம்பரம், குரோம்பெட், பல்லாவரம் வழியாகச் சென்னை நகருக்குள் வராமல் மதுரவாயல் பைபாஸ் வழியாக கோயம்பேடு செல்லும் விதமாகப் போக்குவரத்து மாற்றப்பட்டது.
இந்நிலையில் மீண்டும் இனி TNSTC பேருந்துகள் தாம்பரம், குரோம்பெட், பல்லாவரம் செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு போக்குவரத்துத் துறையின் இந்த அறிவிப்பால் இனி தாம்பரம், குரோம்பெட், பல்லாவரம் உள்ளிட்ட இடங்களுக்குச் செல்பவர்கள் பெருங்கொளத்தூரில் இறங்கி வேறு பேருந்துகள் அல்லது மின்சார ரயில் மூலம் சென்னை நகருக்கு வர வெண்டும் என்ற அவசியம் இருக்காது.
இப்போது சொல்லுங்கள் TNSTC பேருந்துகளில் தாம்பரம் வழியாகச் சென்னை வருபவர்களுக்கு இது மகிழ்ச்சி செய்துதானே!