தமிழ்நாடு

காவல்துறை உடற்தகுதி தேர்வில் ஒரு திருநங்கை… 3 முயற்சிகளுக்குப் பின் வென்ற தீபிகா!

Published

on

தமிழ்நாடு காவல்துறையில் மீண்டும் ஒரு திருநங்கை உடற்தகுதி தேர்வில் வெற்றிப் பெற்று உள்ளார்.

திருநங்கை தீபிகா மூன்று முயற்சிகளுக்குப் பின்னர் தற்போது தமிழ்நாடு காவல்துறை உடல் தகுதி தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். காவல்துறை, சிறைத்துறை ஆகியவற்றுக்கு இரண்டாம் நிலை காவலர்களுக்கான தேர்வு நடைபெற்றது. நேற்று பெண்களுக்கான உடல் தகுதி தேர்வு நேற்று நடந்தது. இதில் திருநங்கை தீபிகா வெற்றிப் பெற்றுள்ளார்.

தென்காசி மாவட்டம் சிவகிரியைச் சேர்ந்தவர் தீபிகா. அவருக்கு 27 வயது ஆகிறது. 10-ம் வகுப்பு வரையில் மட்டுமே படித்துள்ள தீபிகா இதுவரையில் தனது போலீஸ் கனவுக்காக மூன்று முறை தேர்வு எழுதியுள்ளார். இந்த முறை நிச்சயம் தனக்கு போலீஸ் வேலை கிடைத்துவிடும் என நம்பிக்கை உடன் தெரிவித்துள்ளார்.

தமிழகக் காவல்துறையில் ஏற்கெனவே 2 சப் இன்ஸ்பெக்டர்கள் உட்பட 7 திருநங்கைகள் பணியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version