தமிழ்நாடு
ஆசிரியர்களுக்கு இந்த ஆண்டு பொது மாறுதல் உண்டா? அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்
ஒவ்வொரு ஆண்டும் பள்ளிகள் திறப்பதற்கு முன்னர் ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும் என்பது தெரிந்ததே. ஆனால் இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஆசிரியர்களுக்கு பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்தப்படவில்லை. எனவே இந்த ஆண்டு பொது மாறுதல் ஆசிரியர்களுக்கு இருக்காது என்றே கருதப்படுகிறது.
இதுகுறித்து தகவல் தெரிவித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு இப்போதைக்கு இல்லை என்றாலும் விரைவில் நடத்தப்படும் என்று தெரிவித்தார்.எனவே ஆசிரியர்களுக்கு இந்த ஆண்டு பொது மாறுதல் இருக்காது என்றே ஆசிரியர்கள் வட்டாரங்கள் கூறி வருவதால் ஆசிரியர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் 50% மாணவர்களுடன் சுழற்சி முறையில் வகுப்பு நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
மேலும் பள்ளிகள் திறப்பதற்கு முன்பே அனைத்து ஆசிரியர்களும் தடுப்பூசி செய்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் கொரோனா சூழல் காரணமாக இந்த ஆண்டு ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளது என்றதும் குறைந்தபட்சமாக 50 சதவீதமும் அதிகபட்சமாக 65 சதவீதம் பாடத்திட்டங்கள் கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.