இந்தியா

மீண்டும் போக்குவரத்து சேவை.. வெளியான முக்கிய தகவல்!

Published

on

கோவிட்-19 ஊரடங்கு தளர்வின் போது வழங்கப்பட்ட போக்குவரத்து சேவை, தொடர் தொற்று அதிகரிப்பால் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் மீண்டும் நாடு முழுவதும் வரும் செப்டம்பர் 1-ம் தேதி முதல் ரயில், பேருந்து, மெட்ரோ ரயில் போக்குவரத்து சேவைகளுக்கு மத்திய அரசு அனுமதி வழங்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தரப்பிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

மத்திய அரசு ஏற்கனவே இ-பாஸ் முறையை ரத்து செய்யச் சொல்லி மாநில அரசுகளிடம் வலியுறுத்தியுள்ளது. அதை ஏற்றுப் புதுச்சேரி, கர்நாடகா உள்ளிட்ட மாநில அரசுகள் பயணிகளுக்கு இ-பாஸ், தனிமைப்படுத்தல் போன்ற நடவடிக்கைகளிலிருந்தும் விலக்கு அளித்துள்ளன.

எனவே வரும் செப்டம்பர் 1-ம் தேதி முதல் மத்திய அரசு வழிகாட்டுதல்களின் கீழ் போக்குவரத்து சேவைகள் தொடங்கும் என்று தகவல்கள் கூறுகின்றன.

seithichurul

Trending

Exit mobile version