தமிழ்நாடு
டிராபிக் ராமசாமி காலமானார்; நடிகர் சூரி இரங்கல்
அரசியல்வாதிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருந்த டிராபிக் ராமசாமி சற்றுமுன் காலமானதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
அதிமுக, திமுக என எந்த ஆட்சி இருந்தாலும் ஆட்சியாளர்கள் மீதும் அரசியல்வாதிகள் மீதும் தொடர்ச்சியாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வந்தார் டிராபிக் ராமசாமி. மேலும் பல்வேறு போராட்டங்களை அவர் நடத்தினார் என்பதும் சாலையில் இறங்கி போராட்டம் நடத்துவதில் சளைக்காதவர் என்பதும் குறிப்பிடத்தக்கது
சமூகத்திற்காக பாடுபட்ட டிராபிக் ராமசாமி அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கடந்த சில மணி நேரங்களுக்கு முன்னர் செய்திகள் வெளியானது. இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி டிராபிக் ராமசாமி சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் காலமானார். அவரது மறைவை அடுத்து பலர் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்
சமூக ஆர்வலர் மற்றும் இறுதிவரை மக்களுக்காக போராடியவர் என்றும் அவருக்கு புகழாரம் சூட்டி வருகின்றனர். டிராபிக் ராமசாமி அவர்களின் மறைவு குறித்து நடிகர் சூரி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: சமுதாயத்தின் மீது அக்கறையும், நீதித்துறையின் மீது நம்பிக்கையும் கொண்டு சமுதாயத்தில் நிகழும் தவறான செயல்களுக்கு தொடர்ந்து குரல் கொடுத்து வந்தவரின் குரல் ஓய்ந்துவிட்டது என்ற செய்தி வருத்தமளிக்கிறது. அவரது ஆத்மா இறைவனடி சேர பிராத்திக்கிறேன்.
https://twitter.com/sooriofficial/status/1389492418525876225