தமிழ்நாடு
டிராஃபிக் ராமசாமி மருத்துவமனையில் அனுமதி: ஐசியூவில் தீவிர சிகிச்சை
தமிழக அரசியல்வாதிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தவர் டிராஃபிக் ராமசாமி என்பதும் 80 வயதுக்கு மேலும் இவர் அரசியல் கட்சித் தலைவர்களுக்கு எதிராக வழக்குகள் தொடுத்தும் போலீசாருக்கு எதிராக வழக்குகள் தொடுக்கும் பரபரப்பை ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக உடல் நல குறைவு காரணமாக வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்த டிராஃபிக் ராமசாமி தற்போது உடல் நிலை மேலும் மோசமானதை அடுத்து சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவரது உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் உள்ளதால் அவர் ஐசியு பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் டிராஃபிக் ராமசாமி விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என தமிழகத்தில் உள்ள பலரும் அவருக்காக பிரார்த்தனை செய்து வருகின்றனர். விரைவில் நலம் பெற்று வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.