தமிழ்நாடு

உதயம் திரையரங்கம் அருகே போக்குவரத்தில் மாற்றம்: காவல்துறை அறிவிப்பு!

Published

on

சென்னையில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக பல இடங்களில் மழைநீர் தேங்கி உள்ளதை அடுத்து ஒரு சில இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர காவல்துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை பெருநகர காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

1. பெருநகர சென்னை மாநகராட்சி ஊழியர்கள் திநகர் பசூல்லா சாலையில் தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்றும் பணியை மேற்கொண்டு வருகிறார்கள். இதன் காரணமாக ஜி.என்.செட்டி சாலை – வாணி மஹால் சந்திப்பில் இருந்து பசூல்லா சாலை நோக்கி செல்லும் வாகனங்கள் ஜிஎஸ்டி சாலை ஹபிபுல்லா சாலை வழியாக திருப்பி விடப்படுகிறது.

2. சென்னை மாநகர மழைநீர் வடிகால் வாரிய சீரமைப்பு பணியை அண்ணா பிரதான சாலையில் மேற்கொண்டு வருகிறார்கள்/ இதன் காரணமாக ஜி.எச்.க்கு எதிரே உள்ள அண்ணா பிரதான சாலையில் வடிகால் அமைக்கும் பணியை எளிதாக்கும் வகையில் உதயம் திரையரங்கம் நோக்கி செல்லும் போக்குவரத்து எதிர்திசையில் அனுமதிக்கப்படும்.

இதேபோல் உதயம் திரையரங்கம் சந்திப்பில் காசி முனையிலிருந்து அண்ணா பிரதான சாலை நோக்கி செல்லும் கனரக வாகனங்கள் மட்டும் அசோக்பில்லர் நோக்கி திருப்பி விடப்படுகின்றன. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version