சினிமா செய்திகள்

‘பொறுப்பு பொங்கல்… வெறுப்பு பொங்கல்…’- டி.ஆரின் ‘சிரிப்பு பொங்கல்’ டயலாக்

Published

on

இயக்குநர் டி.ராஜேந்திர், எதுகை மோனையில் பேசியுள்ள ஒரு வீடியோ வைரலாக பரவி வருகிறது.

டி.ஆரின் மகனான சிம்பு நடிப்பில் ‘ஈஸ்வரன்’ படம் இன்று வெளியாகி, ரசிகர்களின் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. விஜய் நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படத்துக்கு இணையாக ஈஸ்வரன் படத்துக்கும் வரவேற்பு கிடைத்துள்ளது. வெகு நாட்களுக்குப் பின்னர் இரண்டு பெரிய ஹீரோக்களின் திரைப்படங்கள், சினிமா தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளதால், சினிமா ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

ஈஸ்வரன் படம் வெளியாவதற்கு முன்னர், அதற்குப் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டன. குறிப்பாக, ’50 சதவீத இருக்கைகளை மட்டுமே நிரப்பிக் கொள்ள அனுமதி இருப்பதால், மாஸ்டர் படத்தை மட்டுமே பொங்கலுக்கு வெளியிட முடியும்’ என்று கூறி, சிம்பு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தனர் திரைப்பட விநியோகஸ்தர்கள்.

பின்னர் ஈஸ்வரன் படக்குழு, ‘இந்தியாவைத் தவிர மற்ற நாடுகளில் ஓடிடி தளம் மூலம் ஈஸ்வரன் ரிலீஸ் செய்யப்படும்’ என்று கூறியது. இதற்கும் விநியோகஸ்தர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், ஈஸ்வரன் படம், திட்டமிட்டபடி பொங்கல் அன்று வெளியிடப்படுமா என்கிற சந்தேகமும் எழுந்தது. இந்நிலையில் அனைத்துப் பிரச்சனைகளும் சுமூகமாக முடிந்து, தற்போது படம் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் டி.ஆர், ஈஸ்வரன் படப் பிரச்சனை குறித்துப் பேச செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தனது பாணியில் ‘பொங்கல்’ என்கிற ஒற்றை வார்த்தை வைத்து விளையாடினார். இந்த சம்பவம் குறித்தான வீடியோ வைரலாகியுள்ளது.

வைரல் வீடியோ பதிவு இதோ:

Trending

Exit mobile version