Connect with us

இந்தியா

நாடாளுமன்றத்தில் விவாதம் செய்யும் முன்பே குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றது ஏன்? டி.ஆர்.பாலு ஆவேசம்!

Published

on

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சாசன பிரிவு 370 ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு நேற்று அறிவித்தது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த மசோதா இன்றுதான் மக்களவையில் விவாதத்தில் உள்ளது. ஆனால் இந்த மசோதாவுக்கு நேற்றே குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.

மாநிலங்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டு விவாதம் நடத்தி நிறைவேற்றப்பட்ட பின்னர் நேற்று மக்களவையில் இந்த மசோதாவை தாக்கல் செய்தார் உள்துறை அமைச்சர் அமித் ஷா. இதனையடுத்து இன்று இந்த மசோதா தொடர்பான விவாதம் நடைபெற்று வருகிறது. அதில் தற்போது அறிவிக்கப்படாத அவசர நிலை இருந்து வருவதாக திமுக மக்களவை குழு தலைவர் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.

இந்த விவாதத்தின் போது பேசிய டி.ஆர்.பாலு, தற்போது அறிவிக்கப்படாத அவசர நிலை நிலவி வருகிறது என்று நான் நினைக்கிறேன். என்னுடைய சக மக்களவை எம்பி பரூக் அப்துல்லா எங்கிருக்கிறார்? அவர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளாரா அல்லது கைது செய்யப்பட்டுள்ளாரா என்று கூட எங்களுக்கு தெரியவில்லை. இதுபோல் காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி ஆகியோர் எங்கிருக்கிறார்கள் என்று கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பேசிய அவர், சட்டப் பிரிவு 370 தற்காலிக தீர்வல்ல, அது நிரந்தர தீர்வு. நாடாளுமன்றத்தில் விவாதம் செய்வதற்கு முன்பே குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றது ஏன்? ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ஒரு பகுதி இன்னும் எதிரிகளின் கைகளில் இருக்கிறது. காஷ்மீரில் சட்டமன்றம் கலைக்கப்பட்ட நிலையில் அங்கு தேர்தலை நடத்தியிருக்க வேண்டும். காஷ்மீர் மக்களின் மனநிலையை பிரதிபலிக்கக் கூடியவர்கள் காஷ்மீர் சட்டமன்றத்தில்தான் உள்ளனர். பெரும்பான்மை இருக்கும் ஒரே காரணத்தால் அனைத்து மசோதாக்களையும் நிறைவேற்றுகிறீர்கள் என கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

author avatar
seithichurul
Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்9 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன் (ஆகஸ்ட் 17, 2024)

ஆரோக்கியம்18 மணி நேரங்கள் ago

பிளம்ஸ்: இயற்கையின் இனிப்பு மருந்து!

ஆரோக்கியம்18 மணி நேரங்கள் ago

பல் பொடி vs பற்பசை: எது சிறந்தது?

வேலைவாய்ப்பு18 மணி நேரங்கள் ago

ரூ.2,40,000/- ஊதியத்தில் ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

இந்தியா18 மணி நேரங்கள் ago

கர்நாடகா அரசின் SBI, PNB வங்கி கணக்குகள் மூடல் உத்தரவு: தற்காலிக நிறுத்தம்!

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

ஆவணி அவிட்டம் 2024: பூணூல் மாற்ற உகந்த நேரம் மற்றும் முக்கியத்துவம்!

வேலைவாய்ப்பு19 மணி நேரங்கள் ago

NLC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

உலகம்19 மணி நேரங்கள் ago

H-1B விசா: இந்த ஆண்டும் இரண்டாம் சுற்று குலுக்கல்

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் பொழியும்!

ஆரோக்கியம்19 மணி நேரங்கள் ago

தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட வேண்டும் என்பதற்கான 9 காரணங்கள்!

சினிமா3 நாட்கள் ago

டிமாண்டி காலனி 2 விமர்சனங்கள்: ரசிகர்கள் சொல்லும் கருத்துக்கள்!

வணிகம்5 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு!(12-08-2024)

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY)- நகர்ப்புறம் 2.0-க்கு அமைச்சரவை ஒப்புதல்: தகுதி என்ன? மானியம் எவ்வளவு? முழுவிவரம்

வணிகம்5 நாட்கள் ago

ஒரு ஆண்டில் 42,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த ரிலையன்ஸ்!

சினிமா2 நாட்கள் ago

தங்கலான் திரைப்படம்: விமர்சனம், ரேட்டிங், ரிலீஸ் விவரங்கள்!

வணிகம்3 நாட்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் குறையும் தங்கம் விலை (14/08/2024)!

வணிகம்4 நாட்கள் ago

அதிரடியாக தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(13-08-2024)

வணிகம்3 நாட்கள் ago

தங்கம் வாங்குவது நல்லதா? தங்கம் மியூச்சுவல் ஃபண்ட் வாங்குவது நல்லதா?

வணிகம்6 நாட்கள் ago

செபி தலைவர் மீதான ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு: அதிர்ச்சியளிக்கும் புகார்

வணிகம்3 நாட்கள் ago

ஐடி துறையில் தொடரும் பணி நீக்கம்: 1,30,000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இதுவரை பாதிப்பு!