தமிழ்நாடு

உடனடியாக ரூ.550 கோடி, மொத்தம் ரூ.2079 கோடி: அமித்ஷாவிடம் கேட்ட டிஆர் பாலு!

Published

on

தமிழகத்திற்கு வெள்ள நிவாரண நிதியாக உடனடியாக ரூ.550 கோடி வழங்க வேண்டும் என்றும் தமிழகத்திற்கு மொத்தம் வெள்ள நிவாரண நிதியாக ரூ.2079 கோடி வழங்க வேண்டும் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களிடம் திமுக எம்பி டிஆர் பாலு அவர்கள் நேரில் சந்தித்து வலியுறுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக தமிழகத்தில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது, குறிப்பாக ஆயிரக்கணக்கான ஹெக்டேர் பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளன என்பதும் அவர்களுக்கு நிவாரண நிதி அளிப்பது குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமின்றி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூபாய் 5000 நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில் அது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் சற்று முன் தமிழகத்திற்கு உடனடியாக மழை வெள்ள நிவாரண நிதியை வழங்க வேண்டும் என மத்திய அமைச்சர் அமித்ஷாவை நேரில் சந்தித்து திமுக எம்பி டிஆர் பாலு வலியுறுத்தியுள்ளார். 25 மாவட்டங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தேசிய பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து தமிழ்நாட்டிற்கு உடனடியாக நிதி ஒதுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மழை வெள்ள நிவாரண நிதியாக உடனடியாக ரூபாய் ரூ.550 கோடியும் மொத்தமாக ரூபாய் ரூ.2079 கோடியும் வழங்க வேண்டுமென்றும் டிஆர் பாலு கோரிக்கை விடுத்துள்ளார். இந்த கோரிக்கை குறித்து பரிசீலனை செய்வதாக அமித்ஷா கூறியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

Trending

Exit mobile version