இந்தியா

நாளை முதல் தாஜ்மஹாலுக்குள் அனுமதி: ஆனால் அதிலும் ஒரு சர்ப்ரைஸ்!

Published

on

நாளை முதல் தாஜ்மஹாலுக்கு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறியுள்ள சுற்றுலாத்துறை அதில் ஒரு சர்ப்ரைஸ் வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் தாஜ்மஹால் மூடப்பட்டது என்பதும், சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஒரு ஆண்டுக்கும் மேலாக தாஜ்மஹால் மூடப்பட்டு இருக்கும் நிலையில் தற்போது இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து ஒரு சில சுற்றுலா தளங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது. அதன் அடிப்படையில் தற்போது இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் சுற்றுலா பயணிகளுக்கு தாஜ்மஹாலை நாளைமுதல் அனுமதிக்க முடிவு செய்துள்ளது.

ஆனால் அதே நேரத்தில் தாஜ்மஹாலை இரவு நேரத்தில் சென்று பார்வையிட வசதி செய்யப்பட்டுள்ளதாக இந்திய தொல்பொருள் ஆய்வு மையத்தின் ஆய்வாளர் வசந்தகுமார் என்பவர் ஒரு சர்ப்ரைஸ் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஆகஸ்ட் 21, 23 மற்றும் 24 ஆகிய மூன்று நாட்களில் இரவு நேரத்தில் தாஜ்மஹாலை கண்டு மகிழலாம் என்று கூறப்பட்டுள்ளது. இரவுநேரத்தில் நிலவொளியில் பளிங்கினால் கட்டப்பட்ட தாஜ்மஹாலை பார்ப்பதற்கு வித்தியாசமாக இருக்கும் என்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு நிச்சயம் ஒரு மிகச்சிறந்த அனுபவம் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

ஆனால் அதே நேரத்தில் இரவு 8:30-9:00, 9:00-9:30, 9:30-10:00 ஆகிய நேரங்களில் மட்டுமே பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் சுப்ரீம் கோர்ட்டு வழிகாட்டுதலின்படி ஒரே நேரத்தில் 50 சுற்றுலா பயணி சுற்றுலாவாசிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தொல்பொருள் ஆய்வு மையத்தின் அலுவலகம் தெரிவித்துள்ளது. மேலும் இதற்கு சுற்றுலா பயணிகள் முன்கூட்டியே முன்பதிவு செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version