வேலைவாய்ப்பு

தமிழக அரசின் சுற்றுலாத் துறையில் வேலை!

Published

on

தமிழக அரசின் சுற்றுலாத் துறையில் 42 உதவி சுற்றுலா அலுவலர் (கிரேடு-2) வேலைக்களை எழுத்துத் தேர்வு மூலம் நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பை முதல்முறையாகத் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

வேலை: உதவி சுற்றுலா அதிகாரி

காலியிடங்கள்: 42

கல்வித் தகுதி: டிராவல் அண்ட் டூரிஸம் பிரிவில் டிப்ளமோ அல்லது பட்டம் பெற்றவர்கள் அல்லது ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று டிராவல் அண்ட் டூரிஸம் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். கூடுதலாகத் தமிழக அரசின் கணினி சான்றிதழ் தேர்வில் (Certificate course in Computer on Office Automation) அல்லது அதற்கு இணையாக மத்திய மின்னணு, தகவல் தொழில்நுட்பத் துறை நடத்திய தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 01.07.2019 ஆம் தேதியின்படி 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். இட ஒதுக்கீடு பெறும் பிரிவினர் மற்றும் பொதுப்பிரிவைச் சேர்ந்த ஆதரவற்ற விதவைகளுக்கும் வயது வரம்பில் கட்டுப்பாடு கிடையாது.

விண்ணப்பக் கட்டணம்: விண்ணப்ப பதிவு கட்டணமாக ரூ.150, தேர்வு கட்டணமாக 100 செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்குக் கட்டணம் செலுத்த வேண்டாம்.

தேர்வுசெய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வுசெய்யப்படுவர். எழுத்துத் தேர்வு மொத்தம் 500 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும். எழுத்துத் தேர்வில் சுற்றுலா, பயணம் தொடர்பான பாடத்திலிருந்து 300 மதிப்பெண்ணுக்கு 200 கேள்விகள் கேட்கப்படும். கேள்விகள் கொள் குறி வகையில் இடம்பெற்றிருக்கும்.

நேரடியாக உதவி சுற்றுலா அலுவலர் (கிரேடு-2) பணியில் சேருவோர் உதவி சுற்றுலா அலுவலர் (கிரேடு-1), சுற்றுலா அலுவலர், உதவி இயக்குநர், துணை இயக்குநர், இணை இயக்குநர் எனப் படிப்படியாகப் பதவி உயர்வு பெறலாம்.

மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள http://www.tnpsc.gov.in/Notifications/2019_22_NOTYFN_ATO_GRADE-II.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 20.08.2019

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 29.09.2019

seithichurul

Trending

Exit mobile version