தமிழ்நாடு

எங்களை டச் பண்ணினால் நெருப்போடு விளையாடுற மாதிரி: பாஜகவை எச்சரிக்கும் ஜெயக்குமார்!

Published

on

பாஜக தலைவர் அண்ணாமலை திமுகவினரின் சொத்துப்பட்டியல் மற்றும் ஊழல் பட்டியல் வெளியிட்டு பேசியது திமுகவில் மட்டுமல்ல அதிமுகவிலும் பலத்த எதிர்ப்புகளை உருவாக்கியுள்ளது. இதனால் பாஜக-அதிமுக இடையே நிலவி வந்த வார்த்தை மோதல் மீண்டும் வெடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் தற்போது பாஜகவை எச்சரிக்கும் விதமாக அதிமுகவின் ஜெயக்குமார் பேசியுள்ளார்.

#image_title

சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமியிடம் அண்ணாமலை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர், அண்ணாமலை இதுபோன்ற பேட்டிகளைக் கொடுத்து பெரிய ஆளாக வேண்டும் என நினைக்கிறார். அவர் தொடர்பான கேள்வியை என்னிடம் கேட்காதீர்கள். அரசியலில் இருப்பவர்கள் அடிப்படைத் தன்மை தெரிய வேண்டும். அதைவிடுத்து அண்ணாமலை தன்னை முன்னிலைப்படுத்த வேண்டும் என பேசி வருகிறார் என விமர்சித்தார்.

மேலும் நேற்று சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் அண்ணாமலை சொத்து பட்டியல் வெளியிடுவது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த ஜெயக்குமார், தேவையில்லாமல் எங்களை டச் பண்ணினால் நெருப்போடு விளையாடுற மாதிரி. நெருப்போடு விளையாடக்கூடாது என பாஜகவை எச்சரித்தார்.

seithichurul

Trending

Exit mobile version