தமிழ்நாடு

நாளை பள்ளிகள் விடுமுறை: தொடக்கக்கல்வி இயக்குனர் அறிவிப்பு

Published

on

நாளை பள்ளிகள் விடுமுறை என தொடக்கக் கல்வி இயக்குனர் அறிவிப்பு செய்துள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் நாளை விடுமுறை என தொடக்கக் கல்வி இயக்குனர் சற்று முன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பை அடுத்து நாளை நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் விடுமுறை என்பது உறுதியாகியுள்ளது.

நடுநிலைப்பள்ளிகளில் நிர்வாகக்குழு அமைக்கப்பட இருப்பதாகவும் இதன் காரணமாக மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம் என்றும் தொடக்கக்கல்வி இயக்குனர் அறிவித்துள்ளார்.

ஆனால் அதே நேரத்தில் ஆசிரியர்கள் பள்ளிக்கு வரவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் திங்கள்கிழமை முதல் வழக்கம்போல் பள்ளிகள் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

author avatar
seithichurul

Trending

Exit mobile version