தமிழ்நாடு

நாளை எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை: முழு விபரங்கள்!

Published

on

தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக தீபாவளிக்குப் பின்னர் பள்ளி கல்லூரிகள் தொடர்ச்சியாக விடுமுறை அளிக்கப்பட்டு வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் கடந்த சில நாட்களாக பள்ளி கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் நாளை ஒரு சில மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகள் விடுமுறை என்றும் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் தற்போது மேலும் சில மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. அதன் முழு விவரம் இதோ:

விழுப்புரம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.

செங்கல்பட்டு, கடலூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.

திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை நிவராண முகாம்களாக செயல்படும் நடுக்குத்தகை, பாடியநல்லூர், கள்ளூர், ஆட்ரம்பாக்கம், ராமஞ்சேரி, மதுரா, புதூர் ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை.

 

Trending

Exit mobile version