கிரிக்கெட்

நாளை முதல் ஐபிஎல் திருவிழா: முதல் போட்டியில் மோதும் மும்பை-பெங்களூரு!

Published

on

ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் ஐபிஎல் திருவிழா நடைபெறும் என்பதும் இந்த திருவிழாவை கோடிக்கணக்கானோர் கண்டு ரசிப்பார்கள் என்பதும் தெரிந்ததே. அந்த வகையில் ஏப்ரல் 9ஆம் தேதி அதாவது நாளை முதல் இந்தியாவில் ஐபிஎல் திருவிழா தொடங்க உள்ளது.

நாளை நடைபெறும் முதல் போட்டியில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மும்பை மற்றும் பெங்களூரு அணிகள் மோதவுள்ளன. கடந்த ஆண்டு நடந்த ஐபிஎல் போட்டியில் இந்த இரு அணிகளும் இறுதிப் போட்டியில் மோதியதை அடுத்து இந்த இரு அணிகளுக்கும் முதல் போட்டி ஆரம்பமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டாவது போட்டியாக சென்னை மற்றும் டெல்லி அணிகள் மும்பையில் உள்ள மைதானத்தில் மோதுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா வைரஸ் பாதுகாப்பு காரணமாக இந்த முறை பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது இருப்பினும் தொலைக்காட்சி மற்றும் இணையதளங்களில் இந்த போட்டியை பார்வையாளர்கள் கண்டு ரசிக்கலாம்.

முதல் போட்டியில் மும்பை மற்றும் பெங்களூர் அணி பலப்பரிட்சை செய்யவுள்ள நிலையில் எந்த அணி வெற்றி பெறும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Trending

Exit mobile version