கிரிக்கெட்

நாளை தென் ஆப்பிரிக்காவுடன் முதல் டி20 போட்டி: சாதனையை நோக்கி இந்தியா

Published

on

நாளை இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே டெல்லியில் முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற இருக்கும் நிலையில் இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் புதிய சாதனை படைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள நிலையில் நாளை முதல் டி20 தொடர் ஆரம்பமாக உள்ளது. நாளை டெல்லியில் முதலாவது டி20 போட்டி நடைபெற இருக்கும் நிலையில் இரு அணிகளும் தற்போது தீவிர பயிற்சி செய்து வருகின்றன.

இந்த நிலையில் இதுவரை தொடர்ச்சியாக இந்திய அணி 12 டி20 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள நிலையில் நாளைய போட்டியில் வெற்றி பெற்றால் 13, டி.20 சர்வதேச போட்டிகளில் வெற்றி பெற்ற புதிய சாதனையை இந்திய அணி நிகழ்த்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவைப் பொறுத்தவரை தற்போது இளம் வீரர்கள் உற்சாகமாக இருப்பதால் நாளைய போட்டியில் தென்னாபிரிக்க அணியை வீழ்த்தி சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Trending

Exit mobile version