கிரிக்கெட்

நாளை சிஎஸ்கே போட்டி ரத்தா? பிசிசிஐயிடம் நிர்வாகம் முக்கிய தகவல்

Published

on

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் நேற்றைய போட்டி கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் நாளை நடைபெற இருக்கும் சிஎஸ்கே மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியும் நடைபெற வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.

சிஎஸ்கே அணியின் பந்துவீச்சாளர் பயிற்சியாளர் பாலாஜி அவர்கள் உள்பட 3 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இதனை அடுத்து கொரோனா வைரஸ் தடுப்பு விதியின்படி அணியில் உள்ள அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்ய இருப்பதாகவும் இதற்கு குறைந்தது ஆறு நாட்கள் தேவைப்படும் எனவும் என்றும் பிசிசிஐ இடம் சிஎஸ்கே நிர்வாகம் தகவல் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து இன்னும் ஆறு நாட்களுக்கு சிஎஸ்கே அணிக்கு போட்டி இருக்காது என்று கூறப்படுவதால் நாளைய போட்டியும் ஒத்திவைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் மே 7-ஆம் தேதி நடைபெறும் ஐதராபாத்துக்கு எதிரான சிஎஸ்கே போட்டியும் ஒத்திவைக்கப்பட்ட அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
ஏற்கனவே நேற்று நடைபெற இருந்த கொல்கத்தா மற்றும் பெங்களூருக்கு அணிகளுக்கு இடையிலான போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளதை அடுத்து மேலும் சில போட்டிகள் ஒத்திவைக்கப்படும் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி ஐபிஎல் தொடரே நிறுத்தப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

seithichurul

Trending

Exit mobile version