தமிழ்நாடு
இன்று எந்தெந்த மாவட்டங்களில் பள்ளிகள் விடுமுறை!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
குறிப்பாக தீபாவளி முதல் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான மாவட்டங்களில் பள்ளிகள் கல்லூரிகள் தொடங்கப்பட வில்லை என்பதும் கடந்த திங்கட்கிழமை முதல் தான் மீண்டும் பல மாவட்டங்களில் பள்ளிகள் கல்லூரிகள் திறக்கப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் மீண்டும் குறைந்த காற்றழுத்த தாழ்வு தோன்றியுள்ளதை அடுத்து தமிழகம் முழுவதும் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் இன்று இரண்டு மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் விடுமுறை என நேற்று தகவல் வெளியான நிலையில் இன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சில மாவட்டங்களில் பள்ளிகள் விடுமுறை குறித்த அறிவிப்பு வருமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.