தமிழ்நாடு

இன்று எத்தனை மாவட்டங்களுக்கு பள்ளிகள் கல்லூரிகள் விடுமுறை?

Published

on

தமிழகத்துக்கு இன்று எத்தனை மாவட்டங்களுக்கு பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் விடுமுறை என அந்தந்த மாவட்ட தலைவர்கள் அறிவித்த அறிவிப்பு குறித்து தற்போது பார்ப்போம்.

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை மற்றும் வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். கனமழை காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு கடந்த சில நாட்களாக தொடர் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது என்பதும் கடந்த தீபாவளி தினத்திற்கு பிறகு இன்னும் பல மாவட்டங்களில் பள்ளிகள் கல்லூரிகள் திறக்கப்பட வில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று 10 மாவட்டங்களுக்கு பள்ளிகள் விடுமுறை என்றும் ஒரு சில மாவட்டங்களில் மட்டும் கல்லூரிகள் விடுமுறை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை வந்துள்ள தகவலின்படி காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் செங்கல்பட்டு, கடலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திருவள்ளூரில் பொதுத் தேர்வு நடைபெற இருக்கும் சிபிஎஸ்இ பள்ளி தவிர மற்ற பள்ளிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version