தமிழ்நாடு

21 மாவட்டங்களில் பள்ளிகள், கல்லூரிகள் இன்று விடுமுறை: எந்தெந்த மாவட்டங்கள்?

Published

on

தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக இன்று 21 மாவட்டங்களுக்கு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என்றும் ஒரே ஒரு மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கன மழை மற்றும் வெள்ளம் காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகத்தில் உள்ள பெரும்பாலான மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் வங்கக்கடலில் தோன்றியுள்ள காற்றழுத்த தாழ்வு மையம் காரணமாக தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் பரவலாக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் காரணமாக இன்று 21 மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என்றும் ஒரே ஒரு மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்க பின்வருமாறு: சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, தூத்துக்குடி, கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, விழுப்புரம், சேலம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை மற்றும் காஞ்சிபுரம்.

இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்ட மாவட்டம் பின்வருமாறு: திண்டுக்கல்

seithichurul

Trending

Exit mobile version