தமிழ்நாடு
கனமழையால் இன்றும் பள்ளிகள் விடுமுறை: எந்தெந்த மாவட்டங்களில்?
தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக கடந்த சில நாட்களாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
இருப்பினும் கடந்த இரண்டு நாட்களாக மழை நின்று விட்டதை அடுத்து இன்று முதல் மீண்டும் பள்ளிகள் தொடங்கும் என்றும் செய்திகள் வெளியானது. இந்த நிலையில் இன்றும் ஒரு சில பகுதிகளில் மட்டும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் விடுமுறை என அறிவிக்கப்பட்டு உள்ளன. அந்த அறிவிப்பு குறித்து தற்போது பார்ப்போம்
திருப்பத்தூர் மாவட்டத்தில் மழைநீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (22.11.2021) விடுமுறை என அம்மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவித்துள்ளார்.
அதேபோல் காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத், உத்திரமேரூரில் முகாம்களாக செயல்படும் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை என அம்மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.