தமிழ்நாடு

2வது நாளாக உயர்ந்தது பெட்ரோல், டீசல் விலை: இன்றைய சென்னை நிலவரம்

Published

on

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து காணப்பட்டாலும் சென்னை உள்பட இந்தியாவில் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஒரே நிலையில் இருந்தது என்பதை பார்த்து வந்தோம்.

இந்த நிலையில் நேற்று திடீரென பெட்ரோல் மற்றும் டீசல் லிட்டருக்கு 76 காசுகள் உயர்ந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இன்று 2-வது நாளாக பெட்ரோல் டீசல் விலை உயர்ந்துள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 75 காசுகள் உயர்ந்து ரூபாய் 102.91என்ற விலையில் விற்பனை ஆகி வருகிறது அதேபோல் சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசல் விலை 76 காசுகள் உயர்ந்து ரூபாய் 92.95 என்ற விலையில் விற்பனைக்கு வருகிறது .

ஏற்கனவே சமையல் எண்ணெய், கேஸ் உள்பட பல்வேறு பொருட்களின் விலைவாசி உயர்ந்துள்ள நிலையில் தற்போது பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மத்திய மாநில அரசுகள் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது.

seithichurul

Trending

Exit mobile version