தமிழ்நாடு

பெட்ரோல், டீசல் இன்றும் கணிசமாக உயர்வு: சென்னையில் இன்றைய நிலவரம்!

Published

on

சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்றும் கணிசமாக உயர்ந்துள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்வு காரணமாக சென்னையில் கடந்த சில நாட்களாக தினந்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் சற்று முன்னர் எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்றும் உயர்ந்து உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பெட்ரோல் விலை சென்னையில் ஒரு லிட்டர் 106 ரூபாயை தாண்டி விட்டது என்பதும் டீசல் விலை 102 ரூபாயை தாண்டி விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 31 காசுகள் உயர்ந்து உள்ளதால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.106.35 என விற்பனையாகி வருகிறது. அதே போல் டீசல் விலை ஒரு லிட்டர் 34 காசுகள் உயர்ந்து உள்ளதை அடுத்து ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.102.59 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கணிசமாக உயர்ந்துள்ளது ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது என்பதும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு காரணமாக பொதுமக்கள் திண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version