தமிழ்நாடு

பெட்ரோல், டீசல் விலை புதிய உச்சம்: இன்றும் உயர்வு

Published

on

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டு வருவதை பார்த்து வருகிறோம். நேற்று பெட்ரோல் விலை 105 ரூபாய் என விற்பனையானது என்பதும் டீசல் விலை 101 ரூபாயை தாண்டி விட்டது என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளதை அடுத்து சென்னையில் பெட்ரோல் டீசல் விலை புதிய உச்சத்திற்கு சென்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் இன்று பெட்ரோல் விலை 30 காசுகள் அதிகரித்துள்ளதை அடுத்து ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.105.43 என்ற விலைக்கு விற்பனையாகி வருகிறது. அதே போல் டீசல் விலை வரலாறு காணாத வகையில் ஒரே நாளில் உற்பத்தி 34 காசுகள் அதிகரித்துள்ளதை அடுத்து ஒரு லிட்டர் டீசல் ரூ.101.59 என்ற விலைக்கு விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து உச்சத்திற்கு சென்று வருவதை அடுத்து பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்வு காரணமாக பெட்ரோல் டீசல் விலை உயர்ந்தாலும் மத்திய மாநில அரசுகள் பெட்ரோல் டீசலுக்கான வரியை குறைத்து பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டு வருகிறது.

seithichurul

Trending

Exit mobile version