தமிழ்நாடு
முதல்முறையாக ரூ.100ஐ நெருங்கியது டீசல் விலை: பெட்ரோல் விலையும் உயர்வு!
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு ஏற்ப சென்னையிலும் கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே வந்தது என்பதை பார்த்து வருகிறோம். ஆனால் அதே நேரத்தில் கடந்த இரண்டு நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயராமல் ஒரே விலையில் இருந்து ஓரளவுக்கு நிம்மதியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இதனை அடுத்து டீசல் விலை வரலாற்றில் முதல் முறையாக ரூபாய் 100இ நெருங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இன்று பெயர் சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் உயர்வு குறித்த தகவலை பார்ப்போம். இன்று சென்னையில் பெட்ரோல் விலை 30 காசுகள் உயர்ந்துள்ளது. இதனை அடுத்து 103.31 என்ற விலையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விற்பனை ஆகி வருகிறது
அதேபோல் சென்னையில் இன்று டீசல் விலை இன்று மிக அதிகமாக 34 காசுகள் உயர்ந்துள்ளதை அடுத்து ஒரு லிட்டர் டீசல் விலை சென்னையில் ரூ.99 26 என்ற விலையில் விற்பனை ஆகி வருகிறது.
பெட்ரோல் மற்றும் டீசல் விலை கட்டுக்கடங்காமல் உயர்ந்து கொண்டே இருப்பதை அடுத்து பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். குறிப்பாக ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் விலை பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளதால் பெரும் சிக்கலில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே சமையல் கேஸ் விலை உயர்ந்துள்ளதை அடுத்து பெட்ரோல் டீசல் விலை உயர்ந்துள்ளதால் பொதுமக்களுக்கு மத்திய மாநில அரசுகள் மீது கடும் அதிருப்தி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.