தமிழ்நாடு
முதல்முறையாக ரூ.110ஐ தாண்டியது பெட்ரோல் விலை: டீசல் விலையும் உயர்வு
தமிழகத்தில் கடந்த 15 நாட்களில் 13 நாட்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்த நிலையில் இன்றும் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்துள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 75 காசுகளும் டீசல் விலை லிட்டருக்கு 76 காசுகள் உயர்ந்து உள்ளன. இதனை அடுத்து இன்று பெட்ரோல் விலை ரூபாய் 110.09 எனவும் டீசல் விலை ரூபாய் 100.18 எனவும் விற்பனையாகிறது.
சென்னையில் முதல் முறையாக பெட்ரோல் விலை ரூபாய் 110ஐ தாண்டி உள்ளது என்பதும் அதேபோல் டீசல் விலை ரூபாய் 100ஐ தாண்டி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் கட்டுக்கடங்காமல் உயர்ந்து வருவதால் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஏற்கனவே ஹோட்டல்கள் மற்றும் டீக்கடைகளில் விலை உயர்த்தப்பட்ட நிலையில் இதே போன்று பெட்ரோல் விலை ஏறிக் கொண்டிருந்தால் மற்ற அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் என்பது குறிப்பிடத்தக்கது.