தமிழ்நாடு

இரவு 12 மணி வரை மெட்ரோ ரயில் இயங்கும்: அதிரடி அறிவிப்பு!

Published

on

மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு ஒன்றில் இன்று ஒரு நாள் மட்டும் மெட்ரோ ரயில் இரவு 12 மணி வரை இயங்கும் என அறிவித்துள்ளதால் பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நாளை முதல் ஆயுத பூஜை விடுமுறை ஆரம்பிக்க உள்ளது என்பதை அடுத்து இன்று மாலை முதலே சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் பயணிகள் குவிய தொடங்கி உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கோயம்பேடு பேருந்து நிலையம், சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்கள் மற்றும் விமான நிலையம் ஆகிய பகுதிகளுக்கு சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் மக்கள் செல்வார்கள் என்றும் அங்கிருந்து பேருந்து, ரயில், விமானத்தைப் பிடித்து தங்கள் சொந்த ஊரை அடைவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கோயம்பேடு, எழும்பூர், சென்ட்ரல், விமான நிலையம் ஆகியவற்றை இணைக்கும் ஒரே போக்குவரத்து மெட்ரோ ரயில் தான் என்பதால் மெட்ரோ ரயிலை இன்று ஒரு நாள் மட்டும் கூடுதல் நேரத்திற்கு இயக்க வேண்டும் என்ற கோரிக்கை பொதுமக்கள் மற்றும் பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து இன்று ஆயுத பூஜை விடுமுறை ஆரம்பிக்க உள்ளதால் இன்று ஒரு நாள் மட்டும் இரவு 12 மணிவரை மெட்ரோ ரயில் இயங்கும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு பயணிகளுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version