தமிழ்நாடு
இன்று 9 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை: வானிலை அறிவிப்பு
ஒருபக்கம் அக்னி நட்சத்திர வெயில் கொளுத்தி வந்தபோதிலும் இன்னொருபக்கம் தமிழகத்தின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
அசானி புயல் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகத்தில் மழை பெய்து வரும் நிலையில் இன்று 9 மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், விருதுநகர், சேலம் மற்றும் ஈரோடு ஆகிய 9 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை தமிழ்நாடு மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்றும் மே 18ஆம் தேதி தமிழகத்தில் உள்ள அநேக இடங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், பெரம்பலூர், கரூர், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது .
மே 19ஆம் தேதி தமிழ்நாடு புதுவை மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.