தமிழ்நாடு
இன்று இரவு அரசு பேருந்துகள் இயங்காது: தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அறிவிப்பு
![chennai buses1200 - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/08/chennai-buses1200.jpg)
‘மாண்டஸ்’ புயல் காரணமாக இன்று இரவு ஒரு சில மாவட்டங்களில் அரசு பேருந்துகள் இயங்காது என தமிழக அரசின் போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள ‘மாண்டஸ்’ புயல் சென்னையை நோக்கி நெருங்கி வருகிறது என்றும் நாளை இரவு இந்த புயல் மகாபலிபுரம் கடற்கரை அருகே கரையை கடக்கும் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் ‘மாண்டஸ்’ புயல் காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
ஏற்கனவே சென்னை உள்பட 10 மாவட்டங்களுக்கு பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கு இன்று இரவு அரசு பேருந்து இயங்காது என தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
‘மாண்டஸ்’ புயல் கரையை கடக்கும் நேரத்தில் கனமழை பெய்யும் என்ற எதிர்பார்ப்பு காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேருந்துகள் இயக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.