தமிழ்நாடு
தமிழகத்தில் மேலும் 54 பேருக்கு கொரோனா.. 2 நபர்கள் பலி.. இன்றைய முழு நிலவரம் என்ன?
தமிழகத்தில் மேலும் 54 பேருக்கு இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதியாகியுள்ளது. இன்று மட்டும் 90 பேர் குணமடைந்துள்ளனர். எனவே தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,683 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை தமிழகத்தில் 752 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டுள்ளனர். சென்னையில் இன்று அதிகபட்சமாக 27 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
தொடர்ந்து சேலம் 5, நாமக்கல் 4, திண்டுக்கல், விருதுநகர் தலா 3, திருப்பத்தூர், விழுப்புரம், தென் காசி, திருவாரூர், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் தலா ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
மேலும், தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் 2 நபர்கள் உயர்ந்துள்ளன. அதனால் பலி எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது.