வேலைவாய்ப்பு
இந்திய ரயில்வேயில் பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலை!இன்றே கடைசிநாள்!
மத்திய அரசின் இந்திய ரயில்வே காலியிடங்கள் 495 உள்ளது. இதில் நில அளவைத் துறை, பாதுகாப்புத் துறை, மத்திய நீர்வளத் துறை, மின்சாரத் துறை போன்ற பல்வேறு பொறியியல் பிரிவுகளில் பொறியியல் வேலைக்கான அறிவிப்பை மத்திய பணியாளர் தேர்வாணையம்(யுபிஎஸ்சி) வெளியிட்டிருந்தது. இதற்கு விண்ணப்பியுங்கள்.
மொத்த காலியிடங்கள்: 495
காலியிடங்கள் உள்ள துறைகள்:
1. Civil Engineering.
2. Mechanical Engineering.
3. Electrical Engineering.
4. Electronics & Telecommunication Engineering.
வயது: 01.01.2020 தேதியின்படி 21 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.upsconline.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
கட்டணம்: ரூ.200. பெண்கள், எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதார்களுக்குக் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள https://www.upsc.gov.in/sites/default/files/Notice-ESEP-2020-Engl_0.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 15.10.2019