தமிழ்நாடு
டி.என்.பி.எஸ்.சி விண்ணப்பிக்க இன்றே கடைசி: நீட்டிப்பு கிடையாது என அறிவிப்பு!
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் குரூப் 2a ஆகிய பதவிகளுக்கு விண்ணப்பிக்க மார்ச் 23ஆம் தேதி கடைசி தேதி என்று அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் விண்ணப்பிக்க இன்றே கடைசி என்றும் நீடிப்பு கிடைக்காது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க முடியாது என்றும் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி தேதி என்று நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல்ராஜன் அவர்கள் தெரிவித்துள்ளார்
எனவே இதுவரை இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்காதவர்கள் உடனடியாக இன்று விண்ணப்பிக்குமாறு அறிவிக்கப்படுகின்றனர். ஒரு சில இணையதளங்கள், சமூக வலைதளங்களில் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீடிப்பு குறித்த அறிவிப்பு வரும் என்று கூறப்படுவது தகவல் தவறானது என்றும் நீட்டிப்பு கிடையாது என்று நிதியமைச்சர் உறுதிபடக் கூறி உள்ளதால் உடனடியாக விண்ணப்பிக்கும் படி அறிவுறுத்தப்படுகின்றனர்.