கிரிக்கெட்
டாஸ் வென்ற மும்பை எடுத்த அதிரடி முடிவு!
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று 24வது போட்டி டெல்லி மைதானத்தில் மும்பை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே இன்னும் சில நிமிடங்களில் நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான டாஸ் சற்று முன் போடப்பட்ட நிலையில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது
இதனை அடுத்து ராஜஸ்தான் அணி இன்னும் சில நிமிடங்களில் பேட்டிங் செய்ய களமிறங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மும்பை அணி இதுவரை 5 போட்டிகளில் விளையாடி இரண்டில் வெற்றியும் மூன்றில் தோல்வியும் அடைந்துள்ளது என்பதும், அதேபோல் ராஜஸ்தான் அணியும் 5 போட்டிகளில் விளையாடி இரண்டில் வெற்றியும் மூன்றில் தோல்வியும் அடைந்துள்ளது என்பதும் குறிப்ப்பிடத்தக்கது. இருப்பினும் மும்பை அணி ரன்ரேட் காரணமாக 4-வது இடத்திலும் ராஜஸ்தான் அணி 7-வது இடத்திலும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இன்றைய போட்டியில் மும்பை வென்றால் அதே நான்காவது இடத்திலும் ராஜஸ்தான் என்றால் அந்த அணி நான்காவது இடத்தையும் பிடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய போட்டியில் இரு அணிகளிலும் இடம்பெற்றுள்ள வீரர்கள் குறித்த விவரம் பின்வருமாறு:
ராஜஸ்தான் அணி: பட்லர், யாஷஷ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், டேவிட் மில்லர், ஷிவம் டூபே, ரியான் பராக், கிறிஸ் மோரிஸ், ராகுல் திவேட்டியா, உனாகட், சேட்டன் சகாரியா, முஸ்தபா ரஹ்மான்
மும்பை அணி: டீகாக், ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, பொல்லார்டு, க்ருணால் பாண்ட்யா, நாதன் கெளட்லர், ஜெயந்த் யாதவ், ராகுல் சஹார், பும்ரா, டிரெண்ட் போல்ட்