இந்தியா
காலையில் 880, மாலையில் 1080: ஒரே நாளில் தங்கம் விலை படுசரிவு!
இன்று காலையில் சென்னையில் சவரனுக்கு ரூபாய் 880 தங்கம் விலை குறைந்து இருந்த நிலையில் மாலையில் சவரனுக்கு ஆயிரத்து 80 ரூபாய் குறைந்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.
கடந்த சில நாட்களாக தங்கம் விலை திடீரென அதிகரித்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். முதல் முறையாக தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு 5 ஆயிரத்தை தாண்டியதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் இன்று காலை தங்க மார்க்கெட் தொடங்கியவுடன் பெரும் சரிவு ஏற்பட்டது என்பதும் கிராமுக்கு 110 ரூபாயும் சவரனுக்கு 880 ரூபாய் குறைந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில் தற்போது ஆயிரத்து 80 ரூபாய் சவரனுக்கு குறைந்துள்ளதாக சென்னையில் உள்ள நகைக்கடை அதிபர்கள் தெரிவித்துள்ளனர். ஒரே நாளில் ஒரு சவரனுக்கு 1080 ரூபாய் குறைந்துள்ளது பொதுமக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் கச்சா எண்ணெய் விலை உயர உயர தங்கத்தின் விலை சரியும் என்றும் அதனால் தங்கத்தில் முதலீடு செய்தவர்கள் அதை எடுத்துவிட்டு கச்சா எண்ணெயில் முதலீடு செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.