தமிழ்நாடு
இன்று சென்னை உள்பட 5 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!
![Chennai-Rains-1 - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/07/Chennai-Rains-1.jpg)
தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவக்காற்று காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் கோவை, நீலகிரி, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 5 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் ஆகஸ்ட் 1, 2, 3 ஆகிய தேதிகளில் கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், தென்காசி மற்றும் கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என்றும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும் என்றும், தமிழ் நாட்டின் இதர பெரும்பாலான மாவட்டங்களில் வராண்டா நிலைதான் நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் சில இடங்களில் மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும் மேலும் வங்கக்கடலில் தென்மேற்கு தென்கிழக்கு இலங்கை பகுதிகளில் இன்று பலத்த காற்று வீசக்கூடும் என்றும் இன்றும் நாளையும் வங்ககடலில் வடமேற்கு மத்திய பகுதிகளில் பலத்த காற்று வீச வாய்ப்பு என்றும் கூறியுள்ளது.
அதேபோல் அரபிக்கடலில் மூன்றாம் தேதி வரை கர்நாடக கரையோர பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் அதனால் இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.