தமிழ்நாடு

தமிழகம் புதுவையில் இறுதி வேட்பாளர் பட்டியல்: இன்று வெளியீடு

Published

on

தமிழகம் மற்றும் புதுவையில் ஏப்ரல் 6-ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் கடந்த 12ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. கடந்த 19ஆம் தேதியுடன் வேட்புமனு தாக்கல் முடிவடைந்த நிலையில், 20ஆம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலிக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள ஒவ்வொரு தொகுதியிலும் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதி பட்டியல் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட உள்ளது. தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் போட்டியிட 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் அவற்றை 4515 மனுக்களை ஏற்றுக் கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் கன்னியாகுமரி மக்களவைத் தேர்தலில் போட்டியிட 23 பேர் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் 10 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 13 பேர் போட்டியிடுகின்றனர். இன்று மாலை 3 மணிக்குள் வேட்பாளர் தங்களது மனுவை வாபஸ் பெற கடைசி நேரம் என்பதால் அதனைத் தொடர்ந்து 234 தொகுதிகளிலும் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று மாலை வெளியிடப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அதேபோல் புதுவையில் உள்ள 30 தொகுதிகளுக்கும் வேட்பாளர் பரிசீலனை பணிகள் முடிவடைந்த நிலையில் இன்று மாலை இறுதி பட்டியல் வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Trending

Exit mobile version