செய்திகள்

ஒரு நாள் பாதிப்பு 9 ஆயிரம்.. தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா….

Published

on

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தினசரி பாதிப்பு 750ஆக இருந்த நிலையில் கடந்த சில நாட்களாக அது படுவேகமாக அதிகரித்து நேற்று முன் தினம் கொரோனா பாதிப்பு 7 ஆயிரத்தை நெருங்கியது. குறிப்பாக சென்னையில் மிகவும் அதிக பாதிப்பு காணப்படுகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 8981 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சென்னையில் மட்டும் 4531 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்து செங்கல்பட்டில் 1039 பேரும், கோவயில் 408 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 8 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 984 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.

seithichurul

Trending

Exit mobile version